இலங்கையில் கடந்த வாரம் 18,900 கோடி ரூபா பணம் அச்சடிப்பு! – சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவு மீறல்.

கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியால் 18 ஆயிரத்து 900 கோடி ரூபா பணம் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.

அதேபோல் 18 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மத்திய வங்கி கடனாகவும் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் மத்திய வங்கி இலங்கை அரசுக்கு கடந்த வரம் 36 ஆயிரத்து 900 கோடி ரூபாவை வழங்கியுள்ளது.

பணம் அச்சடிக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில்தான் இந்த அச்சடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.