13 ஒழிக்கப்படும் எனக் கூறிய சரத் வீரசேகரவை இந்திய தூதரகம் அழைத்துள்ளது

மாகாண சபை அமைப்பின் 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை விசாரிக்க இந்திய தூதரகம் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த சந்திப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

மாகாண சபை முறையை ஒழிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

மாகாண சபைகள் நிறுவப்பட்டு முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன, அவர்கள் செய்த பொது சேவை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில், மத்திய அரசிடமிருந்து பிரித்தல் மற்றும் மாகாண சபைகளின் கட்டுப்பாடு ஆகியவை பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.