நெடுந்தீவு படகு விபத்திலிருந்து 38 பேர் காப்பாற்றப்பட்டனர் (Audio News)

நெடுந்தீவு ஜெட்டி நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாக இருந்த இழுவை படகில் இருந்த முப்பத்தெட்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, குறிக்கட்டுவான் ஜெட்டியிலிருந்து நெடுந்தீவுக்கு முப்பத்தெட்டு பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற இழுவை படகு, நெடுந்தீவின் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் அதிக அலை காரணமாக கப்பலின் அடிப்பகுதி தரையில் மோதியுள்ளது.

அதனால் கப்பலுக்குள் நீர் கசிவு ஏற்பட்டு படகு தாழக் கூடிய ஆபத்தில் இருப்பதாக வடக்கு கடற்படை கட்டளைக்கு தகவல் ஒன்று கிடைத்தது.

இந்த அறிவிப்பு கிடைத்ததும் உடனடியாக செயல்பட்ட கடற்படையினர், கடலோர ரோந்து கப்பல்கள் மற்றும் இலங்கை கடற்படை கப்பல்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட சிறிய படகுகளை பயன்படுத்தி விபத்தில் சிக்கிய படகையும் அதில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

படகில் கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களையும் கடலில் மூழ்க விடாமல் மீட்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.

மேலும், கடற்படையின் இந்த உடனடி நடவடிக்கையின் காரணமாக, பெரும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளை தவிர்க்க முடிந்தது, மேலும் ‘காளி அம்பாள் 2’ எனும் படகு நெடுந்தீவின் துறைமுக நுழைவாயிலில் மூழ்கியிருந்தால், நெடுந்தீவுக்கான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு , அங்குள்ள நிர்வாகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.