திருமணம் முடிந்த சில நாட்களில் புதுமணத் தம்பதி பரிதாப பலி..!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரன், சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியா ஆகிய இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர். மருத்துவர்களான இருவரும் தங்கள் காதல் குறித்து வீட்டாரிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றுள்ளனர். அதன்படி, கடந்த ஜூன் 1ஆம் தேதி லோகேஷ்வரன் மற்றும் விபூஷ்னியா ஆகிய இருவருக்கும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகள் ஹனிமூன் செல்லாம் என முடிவு செய்தனர். சமீப காலமாகவே மாலத்தீவு, பாலி போன்ற தீவுகளுக்கு ஹனிமூன் செல்வது டிரென்டாக உள்ள நிலையில், இவர்கள் இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு இன்பச் சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி பாலித்தீவை அடைந்த ஜோடி அங்கு சுற்றிப் பார்த்ததுடன் விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த மோட்டார் படகில் அவர்கள் பயணித்த போது அது விபத்துக்குள்ளானதில் புது ஜோடியான லோகேஷ்வரன் மற்றும் விபூஷ்னி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். திருமணமான சில நாள்களிலேயே காதல் ஜோடி உயிரிழந்த சம்பவமானது இரு வீட்டார் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.