ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 270/8 டிக்ளேர் – இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார்.

அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.