பாடசாலைக்கு அருகில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு.

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாா்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை ஹோமாகம – நியந்தகல மற்றும் காலி- இத்தருவா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவா் உயிாிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.