யாழ் – கொழும்பு ரயில் சேவை ஜூலை 15 ஆம் திகதி முதல்

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான புகையிரத சேவை ஜூலை 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் நேற்று (27) அறிவித்துள்ளது.

வடக்கு ரயில்வேயின் புனரமைப்புப் பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான வடக்கு ரயில் பாதையின் புனரமைப்பு இந்திய கடனுதவியுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக அனுராதபுரத்திலிருந்து மஹவ வரையிலான புகையிரதப் பகுதியின் புனரமைப்பு தற்காலிகமாக அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது அனுராதபுரத்திலிருந்து ஓமந்த வரையிலான புகையிரதப் பகுதி முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதால் கொழும்பு கோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.