கோர விபத்தில் இளம் தம்பதி பரிதாபச் சாவு!

வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ காப்புப் பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் என்று குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 34 வயதுடைய சி.பி அமில புஷ்பசிறி என்பவரும், 33 வயதுடைய அவரது மனைவி சதுராணி நிசன்சலா குமாரி என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் கட்டுவன மகிந்த கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற போதே குறித்த தம்பதியினர் விபத்தில் சிக்கியுள்ளனர்.

வேகமாக வந்த லொறி மழை பெய்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியில் வந்த திசைக்குத் திரும்பிம் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த புஷ்பசிறி இலங்கை கடற்படைக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் சமையல்காரராகக் பணியாற்றியவர். இவரது மனைவி கேக் வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.