தேரரை தாக்கிய 8 பேர் கைது! சம்பவம் நடந்தது விகாரையில் அல்ல ….

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் வீடொன்றினுள் வைத்து பல்லேகம சுமண தேரர் உட்பட, யுவதியொருவர் மற்றும் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 8 பேர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கியவர்களது உறவு பெண் ஒருவருடனும் அவரது மகளுடனும் , பல்லேகம சுமண தேரர் வீடொன்றில் இருந்த போது பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்த பிரதேச இளைஞர்கள் குழுவொன்று அவரையும் ஏனைய இருவரையும் தாக்கி வீட்டில் இருந்த தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் விகாரைக்குள் இடம்பெற்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.