அமர்நாத்: 3.97 லட்சம் பேர் சுவாமி தரிசனம், 36 பேர் பலி!

அமர்நாத் புனித யாத்திரையில் 31வது நாளில் 6000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.97 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

1,006 பேர் அடங்கிய புதிய குழு ஒன்று பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 749 ஆண்கள், 215 பெண்கள், 2 குழந்தைகள், 37 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தாண்டு அமர்நாத் குகைக்கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட 36 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

62 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது.

Leave A Reply

Your email address will not be published.