பஸ் – லொறி விபத்தில் பெண்ணொருவர் சாவு – 10 பேர் படுகாயம்.

வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வரக்காப்பொல – துல்ஹிரிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் சென்றவர்களே பாதிப்படைந்துள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.