மனைவியின் கை விரலை கடித்து தின்ற கொடூர கணவர்..!

பெங்களூருவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கடித்து தின்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு கோனன குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார் (45) – புஷ்பா (40) தம்பதியினருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2வது மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா, 2 மகன்களை அழைத்து கொண்டு கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி விஜயக்குமார், புஷ்பா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றியதில், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த விஜயக்குமார், மனைவியின் இடது கை விரலை வாயால் கடித்துள்ளார். பின்னர் விரலை கொடுக்காமல் வாயிலேயே போட்டு மென்று தின்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வலியால் அலறி துடித்த புஷ்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிகிச்சை முடிந்த பிறகு, புஷ்பா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தன் கை விரலை கணவர் கடித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.