லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படமாட்டாது சற்றுமுன் வெளியான அறிவிப்பு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04.08.2023) அதிகரிக்கப்பட மாட்டாது என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலையில் விலை திருத்தம் செய்யப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விலை 2982 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.