“நான் சிவபெருமானின் அவதாரம்…” – போலீசாரை அதிரவைத்த கொலையாளி..!

ராஜஸ்தானில் குடிபோதையில் வயதான பெண்மணியை அடித்துக் கொன்றதாக கைதுசெய்யப்பட்ட ஆசாமி, தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று கூறி காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

உதய்பூர் மாவட்டம் கொகுண்டா (Gogunda) அருகே உள்ள மலை கிராமத்தில் 85 வயது பெண்மணியை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து கொடுமைப்படுத்தியதுடன், அங்குள்ள மகாதேவன் கோயிலில் வைத்து பெண்மணியை காலால் மிதித்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் கதறிய பெண்மணி சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்மணியை கொடூரமாக தாக்கிய பிரதாப் சிங் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மேலும் இரு சிறுவர்கள் உட்பட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது பிரதாப் சிங் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்றும், உயிரிழந்த பெண்மணியை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வேன் என்றும் கூறி காவல்துறையினருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.