யாழில் பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸுக்குக் கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸொன்று யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது.

இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் குறித்த பஸ் மீது கல் வீசி தாக்கி பஸ்ஸைச் சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.