யாழ். தென்மராட்சியில் கோர விபத்து! இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!! (பிந்திய இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சி, சாவகச்சேரிப் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியுடம் மோட்டார் சைக்கிளும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய இணைப்பு

வாகன விபத்தில் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் பலி.

தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச்சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே வபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.