மட்டக்களப்பில் யானை தாக்கி மீனவர் மரணம்!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் புத்தம்புரி குளத்துக்குக் மீன் பிடிக்கச் சென்றவரே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இன்று (13) காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலவெட்டுவானைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (12) இரவு மீன் பிடிக்கச் சென்று , வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் இன்று (13) காலை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது குளத்துக்கு அருகாமையில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கரடியனாறு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.