குருந்தூர்மலையில் புதிய சிவன் ஆலயம்! – சில பெளத்த, இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவிப்பு

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் புதிய சிவன் ஆலயமொன்றை நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில பெளத்த, இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

வடக்கில் உள்ள சர்ச்சைக்குரிய விகாரைகளான குருந்தூர் மலை, தையிட்டி மற்றும் நாவற்குழி விகாரைகளின் விகாராதிபதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறவுள்ள குறுந்தூர் மலை பொங்கல் விழாவில் எப்படி பொங்க வேண்டும் என தொல்லியல் திணைக்களம் அனுப்பிய கடிதம் இது:-

Leave A Reply

Your email address will not be published.