தலைகீழாக தொங்கவிட்டு சிறுநீர் கழித்து , எச்சில் துப்பிய கொடூரம்! அதிர வைத்த சம்பவம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் பக்கத்து வீட்டுக்காரர்களை தலைகீழாக தொங்கவிட்டு, அவர்கள் மீது சிறுநீர் கழித்த கொடூரம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரைச் சேர்ந்தவர் ஷுபம் மகதே. இவர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

அதில் மகதே தலைகீழாக தொங்கவிடப்பட்டு துன்புறுத்துப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல் நிலையில் மகதே அளித்த புகாரில், தன்னையும் 3 சிறுவர்களையும் பக்கத்து வீட்டார் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது புகாரில், குறித்த நபர்கள் தங்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு தந்கள் மீது சிறுநீர் கழித்ததாகவும், எச்சில் துப்பியதாகவும் தனக்கு நடந்த கொடூரத்தை கூறியிருக்கிறார்.

யுவராஜ் கலண்டே என்பவர் முக்கிய நபராகவும், அவருடன் சேர்ந்து இன்னும் சிலர் தங்களை தாக்கியதாகவும் மகதே கூறியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பொலிஸார் பிரிவு 307 வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பில் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்னும் சிலர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.