வத்தளை குடும்பஸ்தர் நுவரெலியாவில் வெட்டிக்கொலை! – வெள்ளவத்தை பெண் படுகாயம்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் குடுமபஸ்தர் ஒருவர் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கொழும்பு – வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காணித் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

நுவரெலியா மாவட்ட நீதிவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது எனவும் நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.