சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது.14 பேர் உயிரிழப்பு.

பிரேசிலின் வடக்கு அமேசான் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக விமானம் பார்சிலோஸில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது,

விபத்து நடந்த போது 12 சுற்றுலாப் பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்தனர். எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.