மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பிரதீப் உயிரிழப்பு.

கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நபர் 20 நாட்களின் பின் இன்று உயிரிழந்துள்ளார்.

இம்மாதம் முதலாம் திகதி மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

‘மாளிகாவத்தை பிரதீப்’ என அழைக்கப்படும் 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார். இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பஞ்சிகாவத்தே நெவில்’ என்பவரின் சகாவும் ஆவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கெசல்வத்த தினுக’ குழுவினரால் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.