மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! – ஐ.எம்.எப். இலங்கைக்கு நிபந்தனை விதிக்க வற்புறுத்திக் கேட்கிறார் சி.வி.கே.

மனித உரிமை மீறல் தொடர்பில் உரிய பொறிமுறை அவசியம்! – ஐ.எம்.எப். இலங்கைக்கு நிபந்தனை விதிக்க வற்புறுத்திக் கேட்கிறார் சி.வி.கே.

“இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் அதனைக் காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும்.”

– இவ்வாறு வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலகில் சீனா குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாகத் திகழ்கின்ற நிலையில் தனது அடிமடியில் கை வைக்காத நிலையில் சீனா நடந்து கொள்கின்றது.

நாங்கள் அறிந்த வரையில் முன்னர் ஆப்கானிஸ்தான்காரர்களே குறைந்த பணத்தைக் கூடுதல் வட்டிக்குக் கொடுப்பவர்களாக அறிந்திருக்கின்றோம். ஆனால், இந்நிலை மாறி சீனா தற்போது உலகில் குறைந்த பணத்தைக் கூடிய வட்டிக்குக் கொடுக்கும் நாடாக மாறி வருகின்றது.

இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளில் சீனாவே அதிக கடன்களை வழங்கியுள்ள நிலையில் தான் வழங்கிய கடனை எந்த வழியிலும் சீனா மீளப்பெறுவது நிச்சயம்.

சர்வதேச நாணய நிதியம், சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு கூறி வரும் நிலையில் இதுவரை அவ்வாறு நடந்ததாகத் தெரியவில்லை.

நாங்கள் ஒன்றைக் கூறுகின்றோம், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனைக் காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை செய்ய வேண்டும்.

ஆகவே, சீனாவிடம் இலங்கை பெற்ற கடனை எந்த வழியிலும் சீனா மீளப் பெறுமே தவிர கொடுத்த கடனுக்காகத் தனது அடிமடியில் கைவைக்க விடாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.