ஆதித்யா எல்-1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதை சூரியனை நோக்கி வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்டம்பா் 2-ஆம் விண்ணில் செலுத்தியது. அதன் பின்னா் அந்த விண்கலம் புவி சுற்றுப்பாதையில் இருந்து செப்டம்பா் 19-ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, சூரியனை நோக்கி பயணிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டன. விண்ணில் செலுத்தப்பட்ட 28 நாள்களில் 9.2 லட்சம் கி.மீ. தொலைவு பயணித்து, முழுமையாக புவியின் ஈா்ப்பு விசை மண்டலத்தை கடந்து எல்-1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணித்து வருகிறது.

இந்த நிலையில், ஆதித்யா விண்கலத்தின் பயணப் பாதையில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் கடந்த 37 நாள்களாக எல்-1 புள்ளியை நோக்கி சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அவற்றின் இயக்க செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.

இதனிடையே திட்டமிட்ட எல்-1 புள்ளியை சரியாக சென்றடைய ஏதுவாக அக்.6-ஆம் தேதி விண்கலத்தில் உள்ள இயந்திரங்கள் 16 விநாடிகள் இயக்கப்பட்டு அதன் பயணப் பாதையில் சிறிய மாற்றங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், விண்கலத்தில் உள்ள காந்தமானி கருவி சில நாள்களுக்கு பின்னா் இயக்கப்பட்டு அது சரியான திசையில் செல்கிா? என்பதும் உறுதிசெய்யப்படும்.

பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதிக்கு அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாகக் கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (ஹாலோ ஆா்பிட்) நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா், குரோமோஸ்பியா் பகுதிகளை ஆதித்யா ஆய்வு செய்யும். இதற்காக அதில் 7 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.