கத்தியால் குத்தி இளம் யுவதி படுகொலை! – முன்னாள் காதலன் வெறியாட்டம்.

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளம் யுவதி ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.டபிள்யூ. அனுதர்ஷினி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யுவதியின் வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யுவதியின் முன்னாள் காதலனைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.