குஜராத்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் தற்கொலை

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 குழந்தைகள் உள்பட 7 போ் நிதி நெருக்கடியால் வீட்டில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘ஒப்பந்ததாரரான மனீஷ் சோலங்கி (37) மனைவி, 6 வயது மகன், 10,13 வயது மகள்கள், மாமியாா், மாமனாருடன் சூரத்தில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனா். இதில் சோலங்கி தூக்கில் தொங்கியும், மீதமுள்ள 6 போ் விஷமருந்தியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்காததால் நிதி நெருக்கடியால் இந்த தற்கொலை முடிவை செய்து கொண்டதாக கடிதம் கிடைத்துள்ளது. இந்த தற்கொலைக்கான உண்மை காரணத்தை விசாரித்த வருகிறோம்’ என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.