முகேஷ் அம்பானிக்கு 3வது முறையாக கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சலில் 3-வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை 400 கோடி ரூபாய் தரவேண்டும் என மர்ம நபர் கூறியுள்ளார்.

தொழிலதிபரும், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு கடந்த வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். அதில், 20 கோடி ரூபாய் அளிக்காவிட்டால் சுட்டுக்கொலை செய்துவிடப்போவதாக கூறியிருந்தார்.

இதேபோல, சனிக்கிழமை அனுப்பிய மின்னஞ்சலில் 200 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர சைபர் கிரைம் காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து 3-வது முறையாக வந்த செய்தியில்,காவல்துறையினர் தன்னை கண்டிபிடிக்கவோ, கைது செய்யவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 200 கோடி ரூபாய்க்கு பதிலாக 400 கோடி ரூபாயாக வழங்க வேண்டும் என மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெல்ஜியம் நாட்டின் விபிஎன்-ஐ பயன்படுத்த மின்னஞ்சல் அனுப்பியதை கண்டறிந்துள்ள சைபர் கிரைம் காவல்துறையினர், மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய சாதனத்தின் ஐபி முகவரியை வழங்குமாறு, இன்டர்போல் உதவியுடன் பெல்ஜியத்தில் உள்ள நிறுவனத்திடம் கேட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.