இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை போர் இன்றி பேச்சுவார்த்தையின் மூலம் மீட்டுத்தர கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கரளை எழுப்பியுள்ளனர் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேல் பொலிஸார் இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டதையடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.