வவுனியாவில் இன்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மாநாடு, சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.