காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே அந்த வீதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு அருகில் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று இரவு காணாமல்போயிருந்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

56 வயது மதிக்கத்தக்க விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.