பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் சாவு!

மாட்டுக்குப் புல் பிடுங்கிய வேளை பாம்பைப் பிடித்தவரைப் பாம்பு தீண்டியதில் 15 நாள் சிகிச்சையின் பின்பு அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், கைதடி மேற்கைச் சேர்ந்த அருச்சுணன் சுந்தரலிங்கம் என்னும் 55 வயது குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வளர்ப்பு மாட்டுக்குப் புல் பிடுங்கிய வேளை புல்லுக்குள் மறைந்திருந்த புடையன் பாம்பைம் தவறுதலாகப் பிடித்து விட்டார். இதன்போது கையில் அகப்பட்ட பாம்பு தீண்டிவிட்டது.

இம்மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அகப்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.