கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு! – இன்று விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்றும் (23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்கத் தகடுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தமாக 26 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்ற சோதனை நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.