கணவரிடமிருந்து தப்ப கத்தியால் குத்தி , கணவனைப் படுகொலை செய்த மனைவி!

இரும்புக் கம்பியால் தாக்கிய கணவரிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட மனைவி, கணவரின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவி கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெல்லவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் தல்விட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய எஸ். பிரதீப் குமார எனவும், சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய ஆடை தொழிற்சாலை பெண் ஊழியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் உயிரிழந்த நபர் தனது மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார் எனவும், இதையடுத்து மனைவி மேற்கொண்ட பதில் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.