வடக்குக் கடலில் இந்திய மீனவர்கள் 17 பேர் கைது!

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் மூன்று படகுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை மூன்று படகுகளில் புறப்பட்ட மீனவர்களே இன்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்புக்களுக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த வேளையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் ஒரு படகுடன் கைதான தமிழக மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் கைதான தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.