லிட்ரோ எரிவாயு விலை ஜனவரியில் அதிகரிப்பு.

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது இரு லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிக்கப்படுவதால் நாங்கள் விரும்பவிட்டாலும் எரிவாயுவின் விலை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

இதற்கமைவாக தற்போது 3 ஆயிரத்து 565 ரூபாவாக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டருக்கு 18 சதவீத வட் வரி சேர்க்கப்பட்டால் 640 ரூபாவால் எரிவாயு சிலிணடரின் விலை உயர்த்தப்படலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.