இளஞ்செழியன் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானார்

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் 2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றபோதே மாணிக்கவாசகம் இளஞ்செழியன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு முதன்முறையாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நீதிபதி இளஞ்செழியன் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இம்முறை, போட்டியின்றி தெரிவானார்.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நீண்ட காலம் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய நீதிபதி இளஞ்செழியன் , தற்போது வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.