கிறிஸ்மஸ் காலத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.

கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25 ஆம் திகதியும், போயா தினமான டிசம்பர் 26 ஆம் திகதியும் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மது வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் தினமான டிசம்பர் 25 அன்று சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, மதுபானம் விற்பனை செய்வதற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப்பாட்டின் கீழ் உள்ள ஹோட்டல்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

போயா தினத்தில் பல்பொருள் அங்காடிகளை மூடுவது தொடர்பான உத்தரவு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என இலங்கை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.