கொரோனாவால் மேலும் ஒருவர் பலி.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.