வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞர் சடலமாக மீட்பு!

பதுளை, கந்தகொல்ல தமன்வர பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில்(02) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை, தமன்வர கந்தகொல்ல, புடலுமுல்ல பகுதியைச் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

மேற்படி இளைஞர் (01) வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் இன்று (02) காலை அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து தேடுதல் மேற்கொண்டபோது, கந்தகொல்லை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஹெய்னரன்கொல்ல ஓயா பாலத்துக்கு அருகில் அவரின் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நீரோடையின் கீழ் பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே உயிரிழந்தவரின் சடலம் இன்று (02) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.