காட்டு யானை தாக்கி 28 வயது இளைஞர் மரணம்!

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி இளைஞர், காட்டில் மரம் வெட்டிக் கொண்டிருந்த வேளை யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய வசந்த பண்டார என்ற நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.