யாழில் கைதான நால்வரும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

நால்வரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றுவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்ட நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் பஸ்ஸில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.