15 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 03 காடையர்கள் கைது… சிறுமி மருத்துவமனையில்!

வீதியில் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை பலவந்தமாக வெறிச்சோடிய வீட்டொன்றுக்குள் இழுத்துச் சென்று, 03 காடையர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் , மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி கரம்பலா வீதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே நேற்று (07) இரவு இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி நான்கு, இருபத்தைந்து மற்றும் இருபத்தி ஆறு வயதுடைய மூன்று காடையர்கள் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் பெற்றோர் காத்தான்குடியா பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர்கள் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.