கார் மோதி பாதசாரி ஒருவர் பரிதாப உயிரிழப்பு!

வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, ஒருகொடவத்தை பகுதியில் கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் அந்த நபர் சாவடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

தெமட்டகொடை பிரதேசத்தில் இருந்து களனிப் பாலத்தை நோக்கிப் பயணித்த கார் மேற்படி பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒருகொடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.