‘பொங்கு தமிழ்’ பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு. (Photos)

https://we.tl/t-objFIzPomH

‘பொங்கு தமிழ்’ பிரகடனத்தின் 23ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மா.இளம்பிறையன், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற பொங்கு தமிழில் தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.