100 புதிய பிஎஸ்4 பேருந்துகள்: கொடியசைத்துத் தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காலை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் புதிதாக 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்,

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.