உயர்தரத்தை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய திட்டம்.

இந்த வருடம் உயர்தரத்தை பூர்த்தி செய்யும் பாடசாலை மாணவர்களுக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழி அறிவுடன் தொழிற்கல்வி தொடர்பான நடைமுறை பயிற்சி மற்றும் கோட்பாட்டு ஒத்திகையுடன் கூடிய வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்தும் நோக்கில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள G.E.C உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் 09.02.2024 க்கு முன்னர் இத்திட்டத்தில் பதிவு செய்ய முடியும் எனவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.