இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அவர் பயணித்த சொகுசு கார், அதே திசையில் சென்ற கொள்கலனொன்றின் பின்பகுதியில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது கார் பாதுகாப்பு வேலியில் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி (72542) மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அங்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்ததாக போலீசார்

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அங்கு இறந்த பாதுகாப்பு அதிகாரி ஜெயக்கொடி (72542) என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

 

Leave A Reply

Your email address will not be published.