மறைந்த சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஜயரத்ன மலர்சாலைக்கு : ஞாயிறு ஆரச்சிகட்டுவவில் அடக்கம் செய்ய முடிவு

சனத் நிஷாந்த இராஜாங்க அமைச்சரின் சடலம் ராகம வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு , இன்று (ஜன. 25) மாலை 5.30 மணியளவில் ,பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

26ஆம் திகதி நண்பகல் 10.30 மணிக்கு புத்தளத்தில் உள்ள ஆராச்சிக்கட்டுவ வீட்டிற்கு எடுத்துச் சென்று , அங்கு அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடந்த 25 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர்.

கட்டுநாயக்க 11/1 R கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில், கொள்கலன் லொறி ஒன்றை அவர்களது வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட போது அமைச்சரின் கார் கொள்கலன் லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இராஜாங்க அமைச்சரின் கார் பலத்த சேதத்துக்குள்ளானது. அவரது பாதுகாப்பு அதிகாரியான காவல்துறை கான்ஸ்டபிள் அனுராத ஜெயக்கொடி அமைச்சருடன் விபத்தில் இறந்தார். விபத்துக்குள்ளான அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரை உடனடியாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். விபத்தின் பின்னர் வெலிசர நீதவான் தம்மிக்க உடுவெவிதான, ராகம வைத்தியசாலைக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

இங்கு அமைச்சரின் சகோதரர் சேர்ந்த ஜகத் சமந்த பெரேரா அமைச்சரின் சடலத்தை அடையாளம் கண்டு சாட்சியமளித்தார்.

விசாரணையின் போது ஜகத் சமந்த இவ்வாறு தெரிவித்தார். “எனது தம்பி இறந்துவிட்டார், அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 24ஆம் திகதி அமைச்சு அதிகாரி ஒருவரின் பிள்ளையின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அவர் நள்ளிரவு 12 மணியளவில் ஆராச்சி கட்டு பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு நண்பரின் திருமண நிகழ்விலும் கலந்து கொண்டார். என் தம்பி மது அருந்துவதில்லை. சகோதரரின் குடும்பம் கொழும்பில் உள்ளது.”

இராஜாங்க அமைச்சரின் சடலம் ராகம வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , பின்னர் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து ஆராச்சிக்கட்டுவ வீட்டிற்கு எடுத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பான பொலிஸ் விசாரணைகளை கட்டான பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவிதாரணவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து பிரிவின் நிலைய பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இராஜாங்க அமைச்சரின் சடலம் ராகம வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு , இன்று (ஜன. 25) மாலை 5.30 மணியளவில் ,பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

26ஆம் திகதி நண்பகல் 10.30 மணிக்கு புத்தளத்தில் உள்ள ஆராச்சிக்கட்டுவ வீட்டிற்கு எடுத்துச் சென்று , அங்கு அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.