தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக நாளை கலந்துகொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேதா தவிசின் இலங்கை வந்தடைந்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று (03) இலங்கை வந்தடைந்துள்ளார்

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கப் போகிறார்.

தாய்லாந்து பிரதமரின் விஜயத்துடன் இணைந்து இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்து இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தாய்லாந்து பிரதமர் திரு.ஸ்ரேதா தவிசின் அவர்களும் நாளை பிற்பகல் கொழும்பு கொட்டாஞ்சேனை தீபடுத்தாராம தாய் ராஜ மகா விகாரைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.