சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் – சிங்கள மொழிகளில்….

76வது தேசிய தின தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று காலி முகத்திடலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் , பாரளுமன்ற உறுப்பினர்கள் , அதிகாரிகள் தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு விழாவில் இராணுவ மரியாதை மட்டும் நடைபெற்றுள்ளதுடன், இம்முறை கலாச்சார நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

எனவே, இவ் ஆண்டு சுதந்திர விழாவைக் காண பொதுமக்கள் அனுமதிப்படவில்லை.

சுதந்திர வைபவத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதுடன், விழாவின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.